சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இளவேனில் மங்கை

“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024

வசந்தமெனும் இளவேனில்
சுகந்தம் தரும் காலமிது
வாடையும் மெல்ல விலகிட
வசந்தமும் கூடி வந்திட
சாரலும் மெல்ல வீசிட
வந்துவிட்டாள் இளவேனில் மங்கையும் !

ஆடையவிழ்த்த தருக்களில்
அரும்புகள் மெல்லத் துளிர்த்திட
பசுமை எங்கும் கொழிக்குமே
பச்சை ஆடை பூணுமே
இச்சை கொள்ள வைக்குமே
இயற்கையும் அழகில் ஜொலிக்குமே !

பகலவனும் பட்டொளியை வீசிட
பனியும் மெல்ல அகன்றிட
பார்க்கும் இடமெல்லாம்
கண்ணிற்கு விருந்தாகுமே
மொட்டுக்கள் மெல்ல முகையவுக்க
சிட்டுக்கள் எல்லாம் சிறகடித்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திட
இளவேனில் மங்கையும் நாணிடுவாளே !

Nada Mohan
Author: Nada Mohan