இளவேனில் மங்கை

“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024

வசந்தமெனும் இளவேனில்
சுகந்தம் தரும் காலமிது
வாடையும் மெல்ல விலகிட
வசந்தமும் கூடி வந்திட
சாரலும் மெல்ல வீசிட
வந்துவிட்டாள் இளவேனில் மங்கையும் !

ஆடையவிழ்த்த தருக்களில்
அரும்புகள் மெல்லத் துளிர்த்திட
பசுமை எங்கும் கொழிக்குமே
பச்சை ஆடை பூணுமே
இச்சை கொள்ள வைக்குமே
இயற்கையும் அழகில் ஜொலிக்குமே !

பகலவனும் பட்டொளியை வீசிட
பனியும் மெல்ல அகன்றிட
பார்க்கும் இடமெல்லாம்
கண்ணிற்கு விருந்தாகுமே
மொட்டுக்கள் மெல்ல முகையவுக்க
சிட்டுக்கள் எல்லாம் சிறகடித்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திட
இளவேனில் மங்கையும் நாணிடுவாளே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading