” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பூக்களின் புது வசந்தம் கவி இல(128) 11/04/24

பூக்களின் புது வசந்தம்

உதயங்கள் தேடும் இதயங்களில்
வண்ண வண்ண மலர் வனமாய்
பாரெங்கும் பரந்திருக்கும்
பூக்களின் புது வசந்தம்

வானத்து வானவில்லின்வண்ணங்கள்
எம் சிந்தையை மயக்க
சுகந்த வாசம் எங்கும் நிறைந்து
எம்மை ஈர்க்க

மலர்களை சுற்றி ரீங்காரமிட்டு
தேனுண்டு மதிமயங்கும்
பொன் வண்டுக் கூட்டங்களும்
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளும்

கொத்துக் கொத்தாய்
அடுக்கடுக்காய்
பூத்துக் குலுலுங்கும்
மலரினங்கள்

பூமிக்கு அழகாய்
சரங்களாய் மாலைகளாய்
பெண்களின் தலையில் ஒய்யாரமாய்
அர்ச்சனை மலராய் புது மலர்கள்
இறை பதம் அலங்கரிக்குது
வசந்த மலர்களாய்
நன்றி வணக்கம்்

Nada Mohan
Author: Nada Mohan