ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
16-04-2024

பெருமை

யாமறிந்த மொழிகளிலே சிறப்பு
தமிழ் மொழியே நம் பெருமை
இறவாத புகழுடைய பல கவிதை
இயற்றிடலும் எம் கடமை!

கருவாக உயிர் சுமந்த
பெண்ணவளும்
கண்ணாக எனைக் காத்த
தாயவளும்!

நிலைத்த வாழ்வு கொடுரம் கண்டு அடங்கிப் போபவளும்
தொலைத்த கனவு குடும்பத்திற்கென கடமை புரிபவரும்!

நோய் நொடிகள் கண்டு துவண்டிடாமல்
பணிபுரிபவரும்
நோக்கம் அற்று மனமுவந்து
ஈகை அளிப்பவரும்

ஆக்கம் செய்ய கொஞ்சம்
ஊக்கம் செய்யும் ஆசானும்
ஆபத்தில் கோபம் கொண்ட பிள்ளை மேல் கவனம் காட்டும் தந்தையும் பெருமையே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading