” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
16-04-2024

பெருமை

யாமறிந்த மொழிகளிலே சிறப்பு
தமிழ் மொழியே நம் பெருமை
இறவாத புகழுடைய பல கவிதை
இயற்றிடலும் எம் கடமை!

கருவாக உயிர் சுமந்த
பெண்ணவளும்
கண்ணாக எனைக் காத்த
தாயவளும்!

நிலைத்த வாழ்வு கொடுரம் கண்டு அடங்கிப் போபவளும்
தொலைத்த கனவு குடும்பத்திற்கென கடமை புரிபவரும்!

நோய் நொடிகள் கண்டு துவண்டிடாமல்
பணிபுரிபவரும்
நோக்கம் அற்று மனமுவந்து
ஈகை அளிப்பவரும்

ஆக்கம் செய்ய கொஞ்சம்
ஊக்கம் செய்யும் ஆசானும்
ஆபத்தில் கோபம் கொண்ட பிள்ளை மேல் கவனம் காட்டும் தந்தையும் பெருமையே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan