மண் குளிர

மண் குளிர

மண்குளிரப் பெய்யும் மழையே!
கண்மலர்ந்து நிற்கிறாய் வானில்
எண்ணிறைந்து எழில் கோலமிட்டு
எண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறாய்
விண்ணதிர முழக்கம் விளைபயிரின் செழிப்பு
பண்ணதனைப் பாடலில் பரவிடச் செய்யுமே!

கார்காலப்பொழுதும் கடமையின் வேகமும்
பாராள வந்த பகல்பொழுதுப் பரவசங்கள்
கொட்டும் மழையும் கட்டி பனியும்
நிற்குமட்டும் செய்தவம் ஆடியபொழுதுகள்
செவ்வானத் திரைதனிலே
துளிக்கும் நீர்த்துளிகளின் வேகம்
மண்நிறைந்து பெருகுது பாரீர்
மனம் மகிழ்ந்து உருகுது பாரீர்

சித்திரையின் சிறு மழையே!
முத்திரை பதிக்கும் முழுமதியாகிறாய்

நகுலா சிவநாதன் 1758

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading