உனக்குள் ஒரு புது விடியல்

நகுலா சிவநாதன்

உனக்குள் ஒரு புது விடியல்

உன்றன் விடியல் உள்ளத்தில்
உணர்வாய் என்றும் துடிக்கட்டும்!
இன்பம் எழுதும் எழுதுகோலாய்
இறைவன் பாதம் தொடரட்டும்
வென்றே ஒளிரும் அறிவொளியாய்!
வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்!
நன்றே படைக்கும் இன்றமிழால்
நாளும் புதுமை பூக்கட்டும்!

உலகம் போற்றும் புதுவிடியல்
உனக்குள் பரவ முனைந்திடுவாய்!
நலமே போற்றும் நற்றிறனும்
நனவாய் ஆக உழைத்திடுவாய்!
திலகம் போலே மதிப்புடனே
திகழ என்றும் செயற்படுவாய்!
குலமே போற்றும் நல்வாழ்வு
குவியப் பாடு படுவாயே!

நகுலா சிவநாதன் 1762

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading