பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உனக்குள் ஒரு புது விடியல்

நகுலா சிவநாதன்

உனக்குள் ஒரு புது விடியல்

உன்றன் விடியல் உள்ளத்தில்
உணர்வாய் என்றும் துடிக்கட்டும்!
இன்பம் எழுதும் எழுதுகோலாய்
இறைவன் பாதம் தொடரட்டும்
வென்றே ஒளிரும் அறிவொளியாய்!
வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்!
நன்றே படைக்கும் இன்றமிழால்
நாளும் புதுமை பூக்கட்டும்!

உலகம் போற்றும் புதுவிடியல்
உனக்குள் பரவ முனைந்திடுவாய்!
நலமே போற்றும் நற்றிறனும்
நனவாய் ஆக உழைத்திடுவாய்!
திலகம் போலே மதிப்புடனே
திகழ என்றும் செயற்படுவாய்!
குலமே போற்றும் நல்வாழ்வு
குவியப் பாடு படுவாயே!

நகுலா சிவநாதன் 1762

Nada Mohan
Author: Nada Mohan