” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிர்மூலம்…
கனதி குன்றிட
காயங்கள் ஆறிட
வலிகள் அகன்றிட
வருமா வழியொன்று
வரமாய் கேட்டாலும்

அன்றைய நிர்க்கதி
அழிவுற்ற பேரவலம்
நிர்மூலம் கோலங்கள்
நீள்கிறதே நெடும் தொடராய்
நித்தமும் பெருவலியாய்

மே பதினெட்டில்
மீட்பற்ற நிர்மூலம்
ஊர் பேரற்ற உபாதையின்
நிர்மூலம்
வரலாறு தொலைத்த வலிகளில் நிர்மூலம்
வாழ்வின் அவதியில்
உறவுகள் இழப்பில்
வறுமையின் சுவட்டில் நிர்மூலமாகி ஏதிலி வாழ்வின்
இடரின் பிடியில்
நிர்மூலமாகிய தமிழின வாழ்வு
தளிர்க்குமா தடைகள் உடையுமா.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan