சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அருட்கொடையே

நகுலா சிவநாதன்

அருட்கொடையே

பெய்யும் மழையே புவிமேலே
பயிர்கள் வளரப் பொழிகின்றாய்
உய்யும் உயிர்கள் உய்த்திடவே
உணர்வாய் நீயும் பெய்கின்றாய்
கையும் காலும் ஓய்வின்றி
கமமும் செய்யும் விவசாயி
பையும் நிறைய அறுவடையைக்
பாரே கொடுக்க அருளிடுக!

வானம் அருளும் அருட்கொடையே
வளமும் செழிப்பும் பொற்பயிர்ற்கு
தானம் கொடுக்கும் தளிரேநீ
தாரம் வாழ வாழ்த்திடுவாய்
மானம் காக்கும் முறைப்பெண்ணும்
மகிழ்ந்து நிற்பாள் உயர்வுடனே
கானம் பாடும் வையகமுமே
காதல் மொழியை உரைத்துநிற்கும்

நகுலா சிவநாதன்1764

Nada Mohan
Author: Nada Mohan