அருட்கொடையே

நகுலா சிவநாதன்

அருட்கொடையே

பெய்யும் மழையே புவிமேலே
பயிர்கள் வளரப் பொழிகின்றாய்
உய்யும் உயிர்கள் உய்த்திடவே
உணர்வாய் நீயும் பெய்கின்றாய்
கையும் காலும் ஓய்வின்றி
கமமும் செய்யும் விவசாயி
பையும் நிறைய அறுவடையைக்
பாரே கொடுக்க அருளிடுக!

வானம் அருளும் அருட்கொடையே
வளமும் செழிப்பும் பொற்பயிர்ற்கு
தானம் கொடுக்கும் தளிரேநீ
தாரம் வாழ வாழ்த்திடுவாய்
மானம் காக்கும் முறைப்பெண்ணும்
மகிழ்ந்து நிற்பாள் உயர்வுடனே
கானம் பாடும் வையகமுமே
காதல் மொழியை உரைத்துநிற்கும்

நகுலா சிவநாதன்1764

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading