அருட்கொடையே

நகுலா சிவநாதன்

அருட்கொடையே

பெய்யும் மழையே புவிமேலே
பயிர்கள் வளரப் பொழிகின்றாய்
உய்யும் உயிர்கள் உய்த்திடவே
உணர்வாய் நீயும் பெய்கின்றாய்
கையும் காலும் ஓய்வின்றி
கமமும் செய்யும் விவசாயி
பையும் நிறைய அறுவடையைக்
பாரே கொடுக்க அருளிடுக!

வானம் அருளும் அருட்கொடையே
வளமும் செழிப்பும் பொற்பயிர்ற்கு
தானம் கொடுக்கும் தளிரேநீ
தாரம் வாழ வாழ்த்திடுவாய்
மானம் காக்கும் முறைப்பெண்ணும்
மகிழ்ந்து நிற்பாள் உயர்வுடனே
கானம் பாடும் வையகமுமே
காதல் மொழியை உரைத்துநிற்கும்

நகுலா சிவநாதன்1764

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading