” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வெகுமதியே....

வெகுமதியே—
மொழியெனும் படகே ஆசாமி
முதன்மைப்படுத்தும் அறிவாளி
இனமெனும் அடையாளப் பதிவாளி
ஒவ்வொரு வாழ்விலும் உறவாளி

வேற்றக முற்றத்து மல்லிகை நாம்
நாற்றென உயிர்த்தது நம்நிலத்தில்
நயம்பட வாழ்வோம் நற்றமிழில்
நலிவின்றிக் காப்போம் தாய்த்தமிழை

அகிலப் பரிதியின் ஒளிபோல
அன்னை மொழியே உயிர்நாடி
தரணி முழுதும் தமிழ் பரவி
தலை நிமிர்ந்து வாழும் தற்காலம்

தொழில்நுட்பத்திறனில் தொடர்பாடல்
தொலைவும் குன்றிடும் அருகாமை
இயல்பில் இயந்திரப் பயன்பாடு
இணையமே இன்றைய முதலீடு

வளத்தின் செழிப்பில் வலம்புரிபோல்
தரணியெங்கும் தமிழர் உலா
தனித்துவம் தாங்குது பண்பாடாய்
ஆதித்தமிழின் அத்தியாயம்
அரியணை காணும் வெகுமதியில்…
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan