தடமது படைத்தெழும் தனித்துவம்

சர்வேஸ்வரி சிவருபன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஆகாய வீதியெங்கும் அலைவரிசை இசைந்துவர
ஆனந்தமாய் தனித்துவமாய் பாமுகம் பூத்திருக்க
காத்திரம் கொண்ட படைப்புக்கள் எத்தனையோ
தடமது படைத்தெழும் சாதனையும் நிறைந்ததங்கே
சரித்திரக் களமாக்கி படைப்புக்கள் தோன்றியங்கு
இருபத்தேழு அகவையிலே இன்முகமாய் வீசியுமே
தலமைத்துவம் தரனியிலே கால்பதித்து விளையாடி
தர்மசிந்தனைகள் தளராது விரிந்தாட

இறையருள் கூடிடவே இணைசேரும் மக்களுமே
தவறாத கடமையிலே நன்னெறியோடு களமாடி
என்றும் இயம்பட்டும் இலண்டன் வானொலி
காற்றலை சுழன்றுவர தேவகாணம் பரவட்டுமே
ஆ….ஆ….ஆ..கா…ஆ…கா

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading