” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

சர்வேஸ்வரி சிவருபன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஆகாய வீதியெங்கும் அலைவரிசை இசைந்துவர
ஆனந்தமாய் தனித்துவமாய் பாமுகம் பூத்திருக்க
காத்திரம் கொண்ட படைப்புக்கள் எத்தனையோ
தடமது படைத்தெழும் சாதனையும் நிறைந்ததங்கே
சரித்திரக் களமாக்கி படைப்புக்கள் தோன்றியங்கு
இருபத்தேழு அகவையிலே இன்முகமாய் வீசியுமே
தலமைத்துவம் தரனியிலே கால்பதித்து விளையாடி
தர்மசிந்தனைகள் தளராது விரிந்தாட

இறையருள் கூடிடவே இணைசேரும் மக்களுமே
தவறாத கடமையிலே நன்னெறியோடு களமாடி
என்றும் இயம்பட்டும் இலண்டன் வானொலி
காற்றலை சுழன்றுவர தேவகாணம் பரவட்டுமே
ஆ….ஆ….ஆ..கா…ஆ…கா

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan