திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
பாமுகமே வாழி

ஆக்கிவிட தூக்கிவிடும் எம்மவரின் தளம்
ஊக்கங்கொண்டோர் ஆக்கியங்கு கொண்டனரே வளம்
உண்மையில் சொல்லப்போனால் இன்னோர் தாய்நிலம்
என்றுமதன் அருகினிலே வாழ்க்கையின் குதூகலம்

மொழிப்பசி தீர்த்துமே அறிவூட்டும் அகம்
விழிகளுக்கு காட்சியாகி பாருலவும் பாமுகம்
இருபத்தேழு ஆண்டுகளாக மொழிக்கான பயணம்
உருவாகி பலரங்கே அடைந்துகொண்டார் பயனும்

சின்னஞ்சிறு பாலகரும் நுழைந்திடுவார் உற்சாகத்தோடு
எண்ணத்திலே மேன்மைகொண்டு வெளிவருவார் பகுத்தறிவோடு
சிந்தையிலே தெளிவுகொண்ட ஒருவரது நோக்கம்
வந்துகொள்ளும் தலைமுறையை இருக்கும்வரை காக்கும்

எழுதியெழுதி பலபேரும் பக்குவத்தை கொண்டார்கள்
தழுவிக்கொண்ட புகழதனால் முகவரியும் கண்டார்கள்
எத்தனையோ பேனாக்கள் மையிழந்து ஆயுளைத்தொலைத்தன
அத்தனையும் பாமுகத்தில் படைத்ததனால் விளைந்தன

கருத்துக்களை செவி குவிக்கும் அறிவொழியே
பொறுப்பேற்று வழிநடத்தும் பெருமகனார் தனிவழியே
தொடரட்டும் நின்பணி தமிழோடு எந்நாளும்
கடந்திடும் சந்ததிகள் வளமடையும் எதிர்காலம்

ஜெயம்
09-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading