பாமுகமே வாழி

சிவாஜினி சிறிதரன்

லண்டன் தமிழ் வானொலியே காற்றாகி வந்தாய்
கடலாகி வந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய் !

மழலையையும் இளையவரையும்
பெற்றவர் உற்றவர்
எம்மையும்
தொழில் நுட்பகருவியை
கையாழவும் மெய்யாழவும் செய்தாய்

மாமுகமாய் பரிணமித்தாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய்
ஆளிவ்லா விமானமாக
ஆடலும் பாடலும்
போடுகின்றாய்
இணைய வலைத்தளமாய் இயங்குகின்றாய்

நீ வாழி
உன் புகழ்வாழி
உன்னை மிஞ்ச யாரும்
இல்லை
உனக்கு இணை ஏதும் இல்லை

நதிபோல் ஓடுகின்றாய்
நாணல் புல்போல் தயக்கமும் காட்டாய்
துணைவி தூணாக
நின்று உயர்ந்தவன்.நீ
தத்துவ ஞானி
நித்தியசீலி
சிரித்தபடி அணைப்பவளும் நீ

நீ நீடுடி வாழ்க
நித்தமும் நின்புகழ் ஓங்க
நீ வாழி நின்புகழ்வாழி

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading