ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திறனின்மேன்மை தீட்டும் குழந்தைகளே…..,,,

இரா.விஜயகௌரி

வரமென வாய்த்த வழித்தோன்றலிவர்
வைகறை விடியலில் ஆதவப் பேரொளி
நித்தியம் மலரும்நிமிர்ந்தெழும் ஆளுமை
வல்லமை நிறைந்த வைகறைக்குயில்கள்

பேதமை களைந்த பெருவெளிச்சங்கள்
பேணிக்காத்திடின் வல்லமைச்சுடரொளி
விடியலை எழுதிட வலிந்தெழும் கரங்கள்
வேண்டிக் காத்திடுயர்ந்தெழும் தோழமை

கடவுளின் கரங்களில்கரணையின் மனுக்கள்
காத்திரம் நிறைத்த சூத்திர தாரிகள்
அறிந்தால் புரிந்தால் அறிவின் பொக்கிஷம்
தெளிந்தவர்கண்களில். தேவதை வடிவம்

செயற்திறன் மிக்கசேவையின் மைந்தர்
பாமுகப் பந்தலின் பரவசத் தூதுவர்
கள்ளம் கபடம் இல்லாத மானிடர்
உணர்ந்து உரைத்தால் உயர்வின் திறனிவர்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading