திறனின்மேன்மை தீட்டும் குழந்தைகளே…..,,,

இரா.விஜயகௌரி

வரமென வாய்த்த வழித்தோன்றலிவர்
வைகறை விடியலில் ஆதவப் பேரொளி
நித்தியம் மலரும்நிமிர்ந்தெழும் ஆளுமை
வல்லமை நிறைந்த வைகறைக்குயில்கள்

பேதமை களைந்த பெருவெளிச்சங்கள்
பேணிக்காத்திடின் வல்லமைச்சுடரொளி
விடியலை எழுதிட வலிந்தெழும் கரங்கள்
வேண்டிக் காத்திடுயர்ந்தெழும் தோழமை

கடவுளின் கரங்களில்கரணையின் மனுக்கள்
காத்திரம் நிறைத்த சூத்திர தாரிகள்
அறிந்தால் புரிந்தால் அறிவின் பொக்கிஷம்
தெளிந்தவர்கண்களில். தேவதை வடிவம்

செயற்திறன் மிக்கசேவையின் மைந்தர்
பாமுகப் பந்தலின் பரவசத் தூதுவர்
கள்ளம் கபடம் இல்லாத மானிடர்
உணர்ந்து உரைத்தால் உயர்வின் திறனிவர்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading