” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

18.06.2024
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்….269,

தலைப்பு! “வசந்தம்”

தென்றல் காற்றில்
பூவின் வாசம்
திருப்புகழ் இசைக்கும்
வசந்த தேசம்!
மன்றில் புலவர்
கவிதைகள் பேசும்
மரகதச் சோலை
மயில்கள் ஆடும்!

குன்றின் சாரலின்
காந்தள் பூக்கும்
குடையாய் மரங்கள்
நிழலைக்
கொடுக்கும்!
வண்டின் ஓங்கா
ரொலியே ஒலிக்கும்
வாழை மா பலா
கனியைக் கொடுக்கும்!

காதல் பறவை
சிறகை அவிழ்க்கும்
கனிந்த அன்பில்
நெஞ்சம் இனிக்கும்
தீதறு வசந்தம்
திரும்ப வருமா?
தேசம் மீண்டும்
நாளை எழுமா?

கடற்புலி அலையில்
கனலாய் வெடிக்கும்
கயவனின் கப்பலை
இரண்டாய் உடைக்கும்
திடமுடன் பெண்புலி
தீயாய்ப் பறக்கும்
திட்டம் வென்றதும்
புலிக்கொடி பறக்கும்!

என்னரும் முப்படைத்
தலைவர் ஆண்ட
எங்களின் தேய
வசந்தம் திரும்ப
ஈழம் மீட்கும்
காலம் மலர
எழுவோம் தமிழர்
படையாய்த் திரண்டே!

விடுதலை ஈழ
நாட்டில் வாழ்ந்தோம்
கெடுதலை உலகால்
யாவும் இழந்தோம்
படுகொலை மறந்தே
வாழ்வ தெப்படி?
பாரில் வசந்தம்
வருமா அப்படி?

ஒருநாள் தேசம்
வந்தே தீரும்
உலகம் தீர்ப்பைத்
தந்தே தீரும்
வருவது வரட்டும்
என்றே இருப்பதா?
வாவா! ஒன்றாய்
வெல்வோம் நன்றே!

அபிராமி கவிதாசன்.
18.06.2024.

Nada Mohan
Author: Nada Mohan