” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-41
18-06-2024

வசந்தம்

தேசம் முழுதும் பச்சை மரங்கள்
நேசம் கொண்ட நின் தமிழ் மனங்கள்
வாசம் கண்ட வண்ண மலர்கள்
பிரகாசம் கொண்டு கதிரவன் வருகை

புதிய துளிர்கள் மரங்களில் அரும்பும்.
பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியில் கொட்டும்
தேனீக்களும் வண்டுகளும் மலர்களைத் தேடும்
மனங்களிலெல்லாம் புத்துணர்ச்சி பொங்கும்

வலிகளும், சோகங்களும் வலிந்தே
செல்லும்
இருண்ட மனங்களெல்லாம் குறைந்தே செல்லும்
இதயம் கொஞ்சம் இதமாய்த் தெரியும்
இது தானா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan