பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இராசையா கௌரிபாலா

ஒற்றுமை

ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில்
பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே
விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க
தற்பெருமை அழித்திட
ஒற்றுமை கூடுமே

கற்பனையில் மிதக்கும் கலகத்தை விலக்கி
சிற்பமாய் வடிவமைக்க
சிந்தையின் உதயமே
அற்பன் பவிசில் ஆர்ப்பரிக்கும்
கடலே
நற்பலன்பல கிடைக்கும்
நானிலத்தின் ஒற்றுமையே

சுற்றம் தேவை சுவையும் அதுவே
கற்றவர் கைபிடித்து கல்லாமை நீக்கிட
மற்றவரும் நல்வளம்பெற மானுடம் போற்றுமே
குற்றம்காணாக் குவலயம்
கேட்போம் ஒற்றுமையாய்.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading