இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 276
13/08/2024 செவ்வாய்
பருவம்
————
இயற்கையின் பருவம் நான்கு!
இளவேனில் என்பதும் ஒன்று!
நினைக்க இதுபோல் நன்று,
நிலமதில் உண்டோ சொல்லு!

கோடை என்ற பருவம்-இதில்
கொப்பளம் கண்டிடும் சருமம்!
ஆடையும் கேட்கும் விடுமுறை,
அதற்கு இல்லையே படிமுறை!

இலையுதிர் பருவம் துன்பியல்!
இதுவோ இயற்கை உளவியல்
அலைமிகு ஆழிசூழ் உலகதில்
ஆழமாய் பதியும் வாழ்வியல்!

குளிர்மிகு பருவம் இதுவென்று
குறிப்பிட வேண்டுமா சொல்லு
தளிர்களும் தடைப்படும் முறையின்றி
தரணியும் உறங்கிடும் தடையின்றி!
வேறு
பருவத்தே பயிர்செய் என்று,
படித்தவர் சொன்னார் அன்று!
புருவத்தை உயர்த்தா தின்று!
புரிந்து நீ நடப்பது நன்று!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading