பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2029!

சாளரத்தின் ஒளியினிலே..!

கட்டாந்தரையில் குளிரின் மடியில்
விட்டத்தை வெறித்தே பார்த்தபடி
தூங்கிய அந்தக் காலங்களிலெல்லாம்
தூக்கம் அப்படிக் கண்களைத் தழுவின..

பஞ்சு மெத்தையில் பகட்டு வாழ்வில்
துஞ்சுவதற்கே அஞ்சுகின்ற காலம்
நோயென்றும் துயரென்றும் வந்து
நொந்த உடலைக் கொன்றுவிட..

அப்பப்போ சாளரத்தின் வழியே விழி
அப்பப்பா எதைத்தான் தேடுகிறதோ
பட்டுப்போன வாழ்வு துளிர்க்குமா
பட்ட மரங்கள் இலை நிறைக்குமா..

இருளின் பிடி விலக ஒளி புகுமே
அருளும் சாளரமே உன்னூடாய்
எத்தனை காட்சிகள் உள்ளேக
அடைபட்டுக் கிடந்த இதயமும் திறக்கிறதே…!
சிவதர்சனி இராகவன்
19/9/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading