நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-279. தலைப்பு!

“விடியுமா தேசம்”
………….
எங்கட தேர்தல்
முடிந்தது – இன
வாதம் மீண்டும்
நிமிர்ந்தது!

சங்கடம் தீருமா
நாளை? – அட
விடியுமா தேசம்
காலை ?

எந்த உரிமையும்
இல்லை – தமிழ்
பேசியதால் வந்தது
தொல்லை!

தலைவர் ஆண்டார்
நன்று – நாங்கள்
மகிழ்ந்தோம் வாழ்வில்
அன்று!

ஒளிவிடும் நாங்கள்
மெழுகு – ஈழ
மண்ணில் வாழ்ந்தோம்
அழகு!
உடைமை உரிமையைப்
பறித்தார் – எங்கள்
உறவை மண்ணிலே
புதைத்தார்!

விடியுமா மீண்டும்
தேசம் – இன
வெறியரால் எல்லாம்
நாசம்!

புத்தர் போர்வையில்
வேடம் – நமக்குக்
காட்டினார் காடையர்
பாடம்!

ஒற்றுமை வேண்டும்
நமக்கு – இதை
உணர்ந்தால் விடியும்
கிழக்கு!

தலைமுறை வாழ
நினைப்பாய் – தமிழ்க்
கல்வியை ஊட்டி
வளர்ப்பாய்!

இளமைத் துடிப்பில்
இருப்பாய் – தமிழ்
இனத்தை உயர்த்த
உழைப்பாய்!

ஐநா மன்றில்
கோரிக்கை – ஈழம்
அடைய உயர்த்துவோம்
கோடிக்கை!

தேசிய விடுதலை
தோற்குமா?- தமிழர்
திரண்டால் உலகம்
ஏற்குமா?

ஆசியாக் கண்டமே
அலறுமே – இயற்கை
நினைத்தால் ஈழம்
மலருமே!

நாளை விடியும்
தேசமே – தமிழர்
இணைந்தால்தாயின்
பாசமே!

தாய்மொழி தமிழே
இணைக்குமே – ஈழம்
உறுதியாய் ஓர்நாள்
பிறக்குமே!

. ஆசிரியர்..
அபிராமி கவிதாசன்
.24.09.2024

Nada Mohan
Author: Nada Mohan