” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வெற்றிப் பயணம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வெற்றிமுரசு கொட்டுதங்கே கொண்டாட்டம் பாருதம்பி

வற்றிவிட்ட குளத்திலும் வைகைவந்து குதித்ததடா

பற்றிவிட்ட மகிழ்வினிலே மீன்களும் துள்ளுதுதம்பி

கற்றுவிட்ட போதினிலே களமாடவும் நின்றதடா

சுற்றிவிட்ட பம்பரம்போல் சக்கரமாய் சுழருதடா

இற்றவரை கஸ்டமென்றாய் இனியுமொரு சுகமேதம்பி

வீற்றிருந்தேன் அல்லிக் குளத்தருகே ஆரவாரம்கொட்டுதங்கே

தெற்குநோக்கி நின்ற தெய்வம் வடக்கிலே உதயமடா

சத்தியமாய் சொல்லிப்புட்டேன் சங்கதி தெரியுமா

வெற்றியும் எனக்குத்தான் நற்ச்சபையிலே தேர்வானேன்

முற்றிப் பழுத்ததடா முத்தமிழும் முக்கனியும்

விற்றிட முடியாத அழியாச் சொத்துமடா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan