” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வானில் பறக்கும்

கெங்கா ஸ்ரான்லி

பிரபஞ்சம் கூட நம் உடலிலுண்டு
தரவுகள் பல ஆய்வில் கண்டு
தேடுகிறார் இன்னும் எதனை எண்டு
நாடுகின்றோம் நானிலத்தில் நல்லது முண்டு
புகழ்தேடி பறக்கும் மனிதர் பின்பு
புறம்கூறித் திரிவார் என்று நம்பு
முன்னாலே சிரித்துக் காட்டி நடிப்பு
பின்னாலே ஈட்டியால் குத்திடும் பரிவு
பணத்திற்காக எதையும் செய்வர் சிலர்
பணமென்றாலும் நாணயம் பார்ப்பார் பலர்
மானம்பெரிதென மதிப்பவர் பண்பானவர்
மானம்போனாலும் பரவாயில்லை என நினைப்பவர பண்பிலார்
வானில் பறக்கும் விமானம் இடம்நோக்கி
வானில் பறக்கும் பறவை கூடுநோக்கி
மனமோ பறக்கும் அண்டம நோக்கி
வானில் பறக்கும் காற்றுடன் சேர்ந்தே!

Nada Mohan
Author: Nada Mohan