திசைகாட்டி

Vajeetha Mohamed

திசைகாட்டி

களவாடப் படாது அறிவு
கல்வியே கவசமான திறவு

நூல் தரித்து நெசவு
நெய்து துணியாகும்

நூல் படிப்பித்து திசைகாட்டி
மாணவர் மகானாவான்

அறிவைச் சுரண்டி
பகிர்ந்து கொழுத்து

பலவிதப் பாதை வழியே
படியேற்றும் ஒளியாய் தனியே

இழுத்துச் செல்லும் இவர்கள்
எம்மைச் சுமர்க்காத பெற்றோர்கள்

பாரத்தை இறக்கி
பாசத்தை நிறுத்தி

பாரினிலே நாம் வாழ
பல தியாகத்தின் புதையல்

பெற்றோர் எமது திசைகாட்டி

டசின் கணக்கில் புள்ள பெத்து
டாம்பிகமாய் வளர்தெடுத்து

கல்வி வாசனை இல்லாவிட்டாலும்
கண்ணியமாய் வாழவைத்த

திசைகாட்டி எம் மூத்தபெற்றோர்

மனிதம் நிறைந்து மானிடமாய்
வாழ எனக்கு
திசைகாட்டி தி௫ மறையும்
மா நபியும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading