நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அழியாத கோலம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அழியாத கோலம் அறத்தோடு வாழும் //
வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் //
பழியாக எதையும் செய்துமே விடாதே //
விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் //
செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே //
வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே //
ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது //
அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் //

இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது //
இழுக்கை அகற்றியே வாழும் போதிலே //

எழுக என்ற ஏற்றமும் கொண்டே //
தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் //

சிவருபன்சர்வேஸ்வரி
✍💐🧏‍♂️🐚🌞

Nada Mohan
Author: Nada Mohan