அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

“ஒளியிலே தெரிவது”

நேவிஸ் பிலிப் கவி இல(356) 14/11/24

ஒளி கண்டு மொட்டுக்கள் மலர்கின்றன
தாவரங்கள் உணவு பெறுகின்றன
கண்கள் பொருள் காண்கின்றன
உயிர்கள் நிறைவடைகின்றன

ஒற்றை நிலாவும் உதிக்கும் கதிரவனும்
இருளகற்றும் ஒளி விளக்குகள்
இயலாமை எஎன்னும் இருள் நீக்கி
அறிவொளி பரப்பிடும் சுடர் விளக்கு

ஆன்மீக வெளிச்சத்திற்கோர்
முறை விளக்கு ,சான்றோர்க்கு
நல்வழி காட்டிடும் நெறி விளக்கு
பாதைக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு

குன்றின் மேல் எற்றி வைத்த தீபமென
அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
தியாக தீபங்களாம் மாவீரர்

பனி விழும் மலர்வனம் அங்கே
நீத்தாரின் உறைவிடங்கள்
கல்லறைகளில் ஏற்றி வைத்த
தீபங்களின் ஒளியினிலே
அருட் பெரும் சோதியாய்
ஒளியில் தெரிவது யாரோ..???

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading