” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சுனாமி பேரலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-45
26-12-2024

சுனாமி பேரலை

இருபது வருடமானாலும்
இதயம் மறக்குமா
இழப்பின் வலியை
இமைக்கும் நொடியில்

காலனாய் மாறி
கண்மணிகளைக் காவினாய்
கதறல் கேட்கலையா
கடலே உனக்கு!

தரங்கம்பாடி நீயெனவும்
தருவாய் உணவெனவும்
நத்தார் களிப்பிலிருக்க
நாசமானதே மொத்தமும்

ஆழிப் பேரலையே
அள்ளிச் சென்றவரை
அடையாளம் காட்ட
அவள்தாயை காணோம்!

எத்தனை இழப்பு
எம்இனம் கொள்ள
நித்தமும் அமைதியேனோ
நீ மொத்தமாய் பதில்தா!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan