உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள்...

Continue reading

மாண்போடு வருவாய்

நகுலா சிவநாதன்

மாண்போடு வருவாய்

மார்கழியின் பனித்துளிகள் மண்ணை முத்தமிட
கார்காலப்பொழுதுகள் கருமை முகில்கூட்டமாக
மாட்டுத் தொழுவத்தில் உதித்த யேசுவும்
காட்டும் விண்ணொளியும் கவலையை மறக்கச் செய்தன

யேசுவின் பிறப்பில் தேசம் மகிழ்கையில்
வீசுகின்ற தென்றலும் விண்மீனாய் ஒளிர
நாதமாய் நல்விடியல் நன்றாய்த் தெரியுதே!
நன்மைகள் நிலைக்கவே நல்லொளியும் ஒளிருதே!

மார்கழியின் மகிழ்வில் மலர்ந்திட்ட மாதமே
சீர்வண்ணச் சிறப்புகள் பெற்றே
ஊர்போற்ற உலகிலே ஒற்றுமை உயர்வாய்
ஒன்றாகும் நன்நாள் இந்நாளே!;

ஆண்டை நிறைத்திட்ட மார்கழித் திங்களே!
தீண்டும் துன்பங்கள் திசையெங்கும் பறக்க
மீண்டும் புதிய மார்கழியாய் புத்தாண்டில்
மாண்போடு வருவாய் வருடத்தை நிறைப்பாய்!

நகுலா சிவநாதன் 1792

Nada Mohan
Author: Nada Mohan