” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புத்தாண்டே வருக! வருக!

நகுலா சிவநாதன்

புத்தாண்டே வருக! வருக!

புத்தாண்டுப் பெண்ணே வருக வருக!
புதுயுகம் படைக்க வருக!
வித்தாக விளைநிலம் பெருக வருக
விளைவாக நற்பயிர் செழிக்க வருக!

முத்தாக நல்வாழ்க்கை என்றும் மலர்க
முனைப்பாக நல்லேற்றம் என்றும் உயர்க!
கொத்தாக புன்னகை என்றும் மிளிர
கொலுவாக நல்லாட்சி என்றும் மலர்க!

வருக! வருக! புத்தாண்டே
வளங்கள் நிறைக்க வருக
வருவாய் உயர் வருக
தருவாய் நலன்கள் செழிக்க வருக!

நகுலா சிவநாதன் 1793

Nada Mohan
Author: Nada Mohan