18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
வேடம்
அனுராதா சௌரிராஜன்
ஒட்டும் பசையற்று
பொட்டுகள் உதிர்கின்றன!
ஓசைதரும் கொலுசுமணிகள்
உதிர்ந்து ஒலி இழக்கின்றன!
சீப்பில் இப்பொழுது
சின்ன வெள்ளிக் கம்பிகள்!
காலணிகள் தடிமன்
தேய்ந்து குறைந்து விட்டன!
சமைத்த உணவை இன்னும்
சலிக்காது விமர்சிக்கும்!
உருமாறிய நியாய ஆசைகள்
உள்ளத்துள் ஒடுங்கி விட்டன!
உழைப்பின் உருவகங்களாய்
உயரத்தில் பிள்ளைகள்!
சேர்த்தவரையும் சேர்த்து
சேர்ந்திருக்கும் பிள்ளை சிறப்பு!
ஓடியாடி வேலை செய்து
உழைத்திருக்கும் தலைமை!
ஓய்வு பெற்ற பின் தான்
உணரும் தன்னவள் அருமை!
புரியாமல் பிரிந்திருக்கும் சில
பிரிந்த பின் புரிந்து கொள்ளும்!
தேய்ந்ததும் காய்ந்ததும்-உயிர்
ஓய்ந்த பின் உணரப்படும்!
பரிமாறிய பரிணாமங்கள்
பரிதாப தியாக பரிமாணங்கள்!
வாழ்க்கை நாடகத்தில்
வஞ்சியர் வேடம் வலியதே!
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...