” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மலர்க புத்தாண்டே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
02-01-2024

மலர்க புத்தாண்டே

மலர்க புத்தாண்டே
மனித நேயத்துடன்
தேக்கம் ஏதுமின்றி
தெளிந்த நீர்போல

மனத்தில் மகிழ்ச்சியும்
மண்ணில் வளர்ச்சியும்
தேகத்தில் புத்துணர்ச்சியும்
தேசத்தில் மறுமலர்ச்சியும்

ஏக்கங்கள் தீர்ந்து
ஊக்கங்கள் தொடர்ந்து
நோக்கங்கள் தெரிந்து
நேசங்கள் கொண்டு

மணவாசம் கொண்டு
மதவெறி அற்று
மனநோய் அகன்று
மலர்வாய் நீயும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan