“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

போனும் போராட்டமும்

நேவிஸ் பிலிப் கவி இல (379) 09/01/25

இது புரட்சியா இல்லை மறுமலர்ச்சியா
இரட்டை முனை கொண்ட
கூர்மையான வாளா அன்றேல்
போராட்ட வாழ்வின் மறு புறமா??????

நன்மையும் தீமையும்இணைந்ததாய் அறிவியலுக்கோர் பயன் பாடாய்
விஞ்ஞான வளர்ச்சியில் ஓர் படியாய்
செய்தி பரிமாற்றத்தில் உறு துணையாய்

போராட்ட வாழ்விற்கோர்
உந்து சக்தியாய்
வளையாட்டுக்காரருக்கோர்
ஆட்டமாடும் இடமாய்

இளையோரை மட்டுமல்ல
ஆடவர் பெண்டிரையும்
கவரந்திழுக்கும் காட்சிச் சாலையாய்
வேடிக்கைவிநோதங்களின்
நாட்காட்டியாய்

வித விதவண்ணமாய்அழகழகாய்
கைக் கடக்கமாய்
விலையேற்றம் பார்ப்பதில்லை
கைக் காசா கட்டுக் காசா
கவலை ஏதுமில்லை
வாழ்க்கைப் போராட்டத்தில்
இதுவும் ஓர் அங்கமாய்
மாதா மாதம் கட்டிடுவார்
வட்டியுடன் போனுக்குமாய்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan