” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போனும் போராட்டமும்

ஜெயம் தங்கராஜா

கவி 755

போனும் போராட்டமும்

நாகரீக உலகத்தின் நாயகனாய் இதுவே
ஆசைதீர பாவிக்கும் கருவியாய் இதுவே
அடிமையாக்கி மனிதரை ஆளுவதும் இதுவே
குடித்திடும் மதுவைவிட போதைதரும் இதுவே

ஆக்கங்கள் தேங்கியும் கிடப்பது இதனாலே
தூக்கத்தின் அளவும் குறைந்துபோனதும் இதனாலே
உரையாடும் திறமை பாதிப்படைந்ததும் இதனாலே
அரைவாசி நாளும் இரையாகிப்போவதும் இதனாலே

குண்டாகி உடலும் பருமனானது எதனாலே
உண்டுவிட்டு கைபேசியுடன் விளையாடுவதால் அதனாலே
குடும்ப உறுப்பினர்கள் அந்நியர்களாகியதும் எதனாலே
உடும்புப்பிடி பிடிச்ச கைத்தொலைபேசி அதனாலே

படிப்பை பாதியில் பாழாக்கிவிடும் சாதனம்
அடித்து அந்தவிடத்தில் அமர்த்திவிடும் நூதனம்
உள்ளங்கையில் உலகம் இருப்பதாக பெருமை
உள்ளபடி சொல்லப்போனால் ஆறறிவு அடிமை

கடிகாரம் கடிதம் எல்லாமும் போச்சு
முடிவுரை நாட்காட்டிக்கும் கமராக்கும் எழுதியாச்சு
அலாரம் வைக்கிற மணிக்கூடும் போச்சு
உலாவந்த காற்றலையும் இதற்குள் முடங்கியாச்சு

இன்னும் என்னென்னதான் போனால் போச்சு
கண்ணின் ஒளியும் மெல்லனவே மங்கிப்போச்சு
வேண்டினாலும் நீளாத ஆயுளும் போச்சு
நோண்டுவதே போனை வாழ்க்கையில் பிரதானமாயாச்சு

ஜெயம்
09-01-2025

Nada Mohan
Author: Nada Mohan