மொழியும் கவியும்….

சர்வேஸ்வரி.க

சுழலும் பூமியில் சுற்றும் வழியில்….
நிழலும் கவி சொல்லும் மொழியாலே….
அவனியில் பவனிவர அணியாக திரளும் மொழியே……
ஆக்கிவைத்த அத்தனையிலும் எண்ணற்ற
பிரவாகம்….
துளிர்த்த அடையாளம் துரத்தும் காலத்தால்
மாற்றிடமுடியா மகுடமே….
தளம் தந்து களம் இறக்கிய
நற்பணி நானிலத்தில்…..
காலமுள்ளவரை அன்னைமொழியால் …
தமிழ்மொழியால் ……
கவிகோர்த்து பாமுகத்தில்
அலங்கரித்த சரிதம் காலத்தால் அழியாத பொக்கிஷமானதே….
மொழியும் கவியும் தேசத்தின் ஆலாபனை
அடையாளமே….

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading