20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

பாலதேவகஜன்

கவியழகு

கடந்துவிட முடியாத
கால இனிமைகளை
கரிக்கிப்போட துடிக்கும்
கடுமையான வலிகளை
கடத்திச்சென்ற கவியழகே!

உன் புகழ் பாட
உன்னையே அழைக்கிறேன்
உட்கார்ந்து இருந்தபடி
உனக்குள்ளே மூழ்கின்றேன்

கற்பனை தூண்டலும்
ஒப்பனை சாயலும்
ஒன்றிக் கொண்டிட
ஒற்றை காகித்த்தில் பிறந்தவளே!

ஒப்பற்ற உன் புகழை
வரிகளுக்குள் புகுத்தி
இசையோடு உனை மீட்ட
இன்பம் காணுமே உலகு!

வலிகளுக்கு மருந்தானாய்
வலிமைக்கு உரமானாய்
வாழ்க்கைக்கு பாடமானாய்
எனக்கே நீ! உலகமானாய்.

காதலுக்கு தூதுவனாய்
காத்திருப்புக்கு சேவகனாய்
கண்ணீருக்கு ஆறுதலாய்
கருமாரிக்கு காவியமாய்

கலைகளுக்குள் உயர்வாய்
கற்பனைக்கு பரிசாய்
வாழ்த்துக்கு முதலாய்
வந்தவளே என் கவியழகே!

உன் அழகில் மயங்கி
உன் அர்த்தத்தில் கிறங்கி
உனை மீண்டும் மீண்டும்
அழைக்கின்றேன் கவியழகே!

எனக்கான ஆறுதலும் நீயே!
எனக்கான அங்கிகாரமும் நீயே!
உனை அழைத்தபடியே
என்றைக்கும் நான் இருப்பேன்
என் கவியழகே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading