சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி
ஃஃஃஃ

மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்//
மூசிப் பொழியுமே மோகம் தீரவே //
மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே//
ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்//
பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் //
விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் //
கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்//
கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் //
மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் //
வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் //
நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் //
சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் //
ஆதிமுதல்வனின் கருணையும் பெறவே பேருகைவருமே //

மங்களத்தின் அடையாளம் மணம்பரப்பி வருவதுதான் மாசி //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading