தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிதை

அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு
எழில்கொண்ட ஓசைகளின் சந்தங்களோடு
இன்றியமையாத சொற்சேர்க்கையின் வடிவம்
பண்பாண வார்த்தைகளின் படிமம்

வாத்தை ஜாலத்தின் அலங்கரிப்பு
கோர்த்தே கற்பனையின் திரிப்பு
எதுகை மோனைகளுடன் பிறக்கும்
புது கவிதையாகியும் சிறக்கும்

பலர் எழுதினால் கவிதை
சிலர் பேசினாலே கவிதை
கேட்டால் செவிகளுக்கு இன்பம்
பார்த்தால் விழிகளுக்கு இன்பம்

அற்புதமாம் மொழிப் பிரயோகங்கள்
சிந்திக்க வைக்கும் வாசகங்கள்
மெருகூட்டிவிட வனப்பாகும் கலை
அருமருந்து இதைப்போல் இல்லை

எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்
இன்னுமின்னும் படைத்திடத் துடிக்கும்
சரியான வார்தைகளும் பேறாக
விரல்கள் கிறுக்கிடும் நூறாக

ஜெயம்
31-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading