பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிதை

அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு
எழில்கொண்ட ஓசைகளின் சந்தங்களோடு
இன்றியமையாத சொற்சேர்க்கையின் வடிவம்
பண்பாண வார்த்தைகளின் படிமம்

வாத்தை ஜாலத்தின் அலங்கரிப்பு
கோர்த்தே கற்பனையின் திரிப்பு
எதுகை மோனைகளுடன் பிறக்கும்
புது கவிதையாகியும் சிறக்கும்

பலர் எழுதினால் கவிதை
சிலர் பேசினாலே கவிதை
கேட்டால் செவிகளுக்கு இன்பம்
பார்த்தால் விழிகளுக்கு இன்பம்

அற்புதமாம் மொழிப் பிரயோகங்கள்
சிந்திக்க வைக்கும் வாசகங்கள்
மெருகூட்டிவிட வனப்பாகும் கலை
அருமருந்து இதைப்போல் இல்லை

எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்
இன்னுமின்னும் படைத்திடத் துடிக்கும்
சரியான வார்தைகளும் பேறாக
விரல்கள் கிறுக்கிடும் நூறாக

ஜெயம்
31-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading