29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வாழ்வில் கலையும் தொடரா நிலையும்..
சிவதர்சனி இரா
வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்..!!
மண்வளம் காக்கும் கலை
மன நலம் போற்றும் நிலை
உயிரில் உணர்வில் கலக்கும்
உறவாகி உயிர்ப்பாகி நிறையும்..
பாட்டும் நடனமும் பலகலை
பண்பட்ட வாழ்வின் உயிர் நிலை
புண்பட்ட மனத்தினை ஆற்றுப்படுத்த
புகழாரம் சூடும் கலையதுவே..
இசைந்து வாழத்தலைப்படும்
இறைவன் விருப்பை உறவாக்கும்
நிறைந்தே மந்னிடம் வாழ்வேற்ற
நித்திய மகிழ்வே கலையாகும்..
இளமை மனத்தில் பதியமாகி
முதுமை வரைத் துணையாகி
வறுமை போக்கும் வரமாகி
வல்லமை கூட்டும் கலையதுவே..
புலம்பெயர் தேசத்தில் நின்றே
புலமை விலக்கி போட்டி ஈன்று
புகழுக்கும் பெருமைக்கும் துணை
புலன் இழந்து புரியா நிலை..
பணத்தினை வாரி இறைத்தும்
பலமணி நேரம் இழந்தும்
சந்ததி விலக்கியே வாழ்ந்திடுதே
கலை தொடரா நிலையதுவே..
சிவதர்சனி இராகவன்
6/2/2025

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...