கணப்பொழுதில்..

வியாழன் கவிதை நேரத்துக்காக.. சிவதர்சனி இராகவன் சுவிஷ்.. கணப்பொழுதிலே.. எத்தனை கனவுகள் மனத்திடை எண்ணங்கள் வான் வழி பறக்க கட்டுப்படுத்த முடியா...

Continue reading

கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி கணப்பொழுதில் விரைந்தெழுந்து கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு வினைப்பயனோ வினைத்திறனோ அறிவறியாப் பொழுது் கனத்தெழுதும் வாழ்வின்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
20-02-2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நிம்மதி எங்கே காண்பீரோ?
இறைவனைத் தான் துதிப்பீரோ
இரக்க குணம் நிலைத்திடுமோ!

கனவு உலகில் மிதந்து
கண்டதெல்லாம் கொண்டிடக்
கற்பனை நிறைந்திடும் உனக்கு
கண்ணெதிரே குலைந்திடும் வாழ்வு

நல்ல அனுபவம் கொண்டது பரவசம்
நலமற்றது கண்டதிங்கே பக்குவம்
ஆசையை அகற்றி இங்கே
ஆற்றலால் வென்று வா

நினைப்பதெல்லாம் நடக்குமென்று
நிம்மதி வேண்டாமிங்கு
எதிர்கொண்டு எண்ணம் போல் வாழ
ஏமாற்றம் காணோமிங்கு.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan