ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சாமினி துவாரகன்

முகமூடி

ஆரா!
கவனமாய் இரு!
சுதந்திர வானில்
சிறகடித்து
பறப்பதாய் எண்ணி
அலட்சியமாய்
இருந்திடாதே!!!

கல்லெறிந்து
சிறகொடிக்கவும்
அம்பெறிந்து
உனை அழிக்கவும்
ஒரு கூட்டம்
அலைந்து கொண்டிருக்கும்
மறந்திடாதே!!!

புளுகு மூட்டைகளும்
புறங்கொள்ளிகளும்
வஞ்சகப் பிசாசுகளும்
வலை வீசிக் காத்திருக்கும்
சிக்கிண்டு விடாதே!!!

அலங்கரிக்கப்பட்ட
அழகிய குழந்தையே
ஆரா!
நீ கவனமாய் இரு!!!

முகமூடிகள்
அழகானவை!!!
வேடிக்கையானவை!!!
சிரிக்க வைத்து
சிதைத்து விடும்
வியக்க வைத்து
விழுத்தி விடும்!!!!

நுரைகள் அடங்கும் வரை
தேநீர் தெரியாது
திரைகள் விலகும் வரை
உண்மை புரியாது!!!

இளங்குமரியே
ஆரா!
கவனமாய் இரு!
அடிமை ஆகிவிடாதே!!!
ஆசைக்கு மட்டுமல்ல
அன்புக்கும் கூட………

அன்புடன் இவள்
-சாமினி துவாரகன் –
18.02.2025

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading