” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சாமினி துவாரகன்

முகமூடி

ஆரா!
கவனமாய் இரு!
சுதந்திர வானில்
சிறகடித்து
பறப்பதாய் எண்ணி
அலட்சியமாய்
இருந்திடாதே!!!

கல்லெறிந்து
சிறகொடிக்கவும்
அம்பெறிந்து
உனை அழிக்கவும்
ஒரு கூட்டம்
அலைந்து கொண்டிருக்கும்
மறந்திடாதே!!!

புளுகு மூட்டைகளும்
புறங்கொள்ளிகளும்
வஞ்சகப் பிசாசுகளும்
வலை வீசிக் காத்திருக்கும்
சிக்கிண்டு விடாதே!!!

அலங்கரிக்கப்பட்ட
அழகிய குழந்தையே
ஆரா!
நீ கவனமாய் இரு!!!

முகமூடிகள்
அழகானவை!!!
வேடிக்கையானவை!!!
சிரிக்க வைத்து
சிதைத்து விடும்
வியக்க வைத்து
விழுத்தி விடும்!!!!

நுரைகள் அடங்கும் வரை
தேநீர் தெரியாது
திரைகள் விலகும் வரை
உண்மை புரியாது!!!

இளங்குமரியே
ஆரா!
கவனமாய் இரு!
அடிமை ஆகிவிடாதே!!!
ஆசைக்கு மட்டுமல்ல
அன்புக்கும் கூட………

அன்புடன் இவள்
-சாமினி துவாரகன் –
18.02.2025

Nada Mohan
Author: Nada Mohan