” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள்
கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி
விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே
பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால்
பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும்
காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய
பாதவிரல் கோலமிட பேதையவள்-மோதலினால்
என்மனமும் பேதலிக் ஏங்குகிறேன் உன்நினைவால்
முன்னின்று கன்னியவள் மூச்செறிந்து-அன்பினாலே
இன்பயூற்றில் ஏங்குகிறாள் ஏற்றமுடன் கண்களினால்
சொன்னபதல் சொர்க்கமடி சுந்தரியே-என்னவளே
வேல்விழியால் வேகமுடன் வந்தபதில் சொர்க்கமடி
பால்வடியும் உன்வதனம் பார்வையால் -கால்பார்க்க
பொங்கிவரும் நீரூற்றாய் பேனேனடி பெண்ணரசி
அங்கதனில் கண்விழித்தேன் அஞ்சுகமே-நெஞ்சமதில்
காதலினால் வாழ்வினிலே களித்திடலாம் என்னாளும
மோதலிலும் காதல்வரும் முனைப்பு
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan