ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திருமணமாம்

சந்த கவி
இலக்கம்_182
சிவாஜினி சிறிதரன்

“திருமணமாம்”
இருமனம் இணைந்து
ஒருமனதாகி
இன்னாள் நன்னாள்
பொன்னாள்
புனித நாள்!

உள்ளத்தை
உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பினால்
மாளிகை கட்டி
புன்னகையால் குடிபுகுந்து !

அழகான அன்பு பூந்தோட்டம்
ஆனந்த புன்னகை தேரோட்டம்
இன்ப தேன் எங்கும் சிந்தட்டும்
ஈங்கு உவகை பொங்கட்டும்!

முதுமை வந்த போதும்
இளமையாகட்டும் காதல்
முடிநரைத்த போதும்
இனிமையாகட்டும் வாழ்க்கை!

நன்றி
வணக்கம்
08.03.25

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading