ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

உருகுவது மெழுகுவர்த்தியா?..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2121

உருகுவது மெழுகுவர்த்தியா..

உருகுவதும் உணர்வினில்
கரைவதும் நீ மட்டுமா
கருகுவதும் களங்கம்
சுமப்பதும் மனசு இல்லையா
ஏங்குவதும் எச்சரிப்பதும்
அனுபவம் தொல்லையா
அடடா யாவுமே மானிட
வாழ்வில் இல்லையா..

வளர்பிறையாகும் பின்
தேய்பிறை போலும் நிலவு
தளர்வதால் தயங்கியே
பின் செல்வதே அன்பாம்
எப்படி வரும் எப்போ
யார் வடிவில் கிடைக்கும்
அறியோமே புரியோமே..

ஏங்கித் தவிக்கும் உணர்வில்
ஏழ்மை வசதி ஏதப்பா
கைகள் நீட்டி அழைக்கையில்
சரணாகதி தானப்பா
முடிந்துவிடும் சட்டென நம்
வாழ்வியல் தெரிந்திடப்பா
முத்தாய் மகிழ்ந்தே நிதமும்
அன்பில் மூழ்கிடப்பா…
சிவதர்சனி இராகவன்
11/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading