20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

உருகுவது மெழுகுவர்த்தியா?..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2121

உருகுவது மெழுகுவர்த்தியா..

உருகுவதும் உணர்வினில்
கரைவதும் நீ மட்டுமா
கருகுவதும் களங்கம்
சுமப்பதும் மனசு இல்லையா
ஏங்குவதும் எச்சரிப்பதும்
அனுபவம் தொல்லையா
அடடா யாவுமே மானிட
வாழ்வில் இல்லையா..

வளர்பிறையாகும் பின்
தேய்பிறை போலும் நிலவு
தளர்வதால் தயங்கியே
பின் செல்வதே அன்பாம்
எப்படி வரும் எப்போ
யார் வடிவில் கிடைக்கும்
அறியோமே புரியோமே..

ஏங்கித் தவிக்கும் உணர்வில்
ஏழ்மை வசதி ஏதப்பா
கைகள் நீட்டி அழைக்கையில்
சரணாகதி தானப்பா
முடிந்துவிடும் சட்டென நம்
வாழ்வியல் தெரிந்திடப்பா
முத்தாய் மகிழ்ந்தே நிதமும்
அன்பில் மூழ்கிடப்பா…
சிவதர்சனி இராகவன்
11/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading