இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800

பனிப்பாடி ( பென்குயின்)

அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை
அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும்
நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி
வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார்

பறந்திடவே தெரியாது பலமான பறவையிது
பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி
மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம்
மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது

சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும்
சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம்
வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும்
தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு
கிடைக்கட்டும்

நகுலா சிவநாதன் 1800

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading