பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800

பனிப்பாடி ( பென்குயின்)

அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை
அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும்
நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி
வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார்

பறந்திடவே தெரியாது பலமான பறவையிது
பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி
மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம்
மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது

சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும்
சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம்
வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும்
தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு
கிடைக்கட்டும்

நகுலா சிவநாதன் 1800

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading