ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன்
காலமே கவனி…
மெளனத்தை மொழியாக்கி
மனிதத்தை விலையாக்கி
காலத்தை கருக்கிடும்
ஞாலத்தைக் கவனி!

பகிடியும் கிண்டலும்
பற்பல வலிகளும்
காலத்தை விரட்டிட
மனிதத்தை புதைத்திடும்
மாற்றத்தைக் கவனி!

சமூகத்தின் வலைத்தளம்
சங்கதி பலரகம்
நீதியின் நிர்ப்பந்தம்
நிறைந்திடும் நிகழ்வுகள்
தளரும் தன்னிலை கவனி!

எழுச்சியின் வீழ்ச்சியும்
ஏற்றத்தின் தோற்றமும்
மாயையாய் மாற்றிடும்
மனிதத்தைக் கவனி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading