காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன்
காலமே கவனி…
மெளனத்தை மொழியாக்கி
மனிதத்தை விலையாக்கி
காலத்தை கருக்கிடும்
ஞாலத்தைக் கவனி!

பகிடியும் கிண்டலும்
பற்பல வலிகளும்
காலத்தை விரட்டிட
மனிதத்தை புதைத்திடும்
மாற்றத்தைக் கவனி!

சமூகத்தின் வலைத்தளம்
சங்கதி பலரகம்
நீதியின் நிர்ப்பந்தம்
நிறைந்திடும் நிகழ்வுகள்
தளரும் தன்னிலை கவனி!

எழுச்சியின் வீழ்ச்சியும்
ஏற்றத்தின் தோற்றமும்
மாயையாய் மாற்றிடும்
மனிதத்தைக் கவனி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading