பாமாலையில் பூமாலை

ராணி சம்பந்தர்

காலம் செய்த கோலம்
ஆலம் விழுதே தமிழன்
புலம் பெயர்ந்த பொழுது

வந்தோர் வரவேற்ற தளம்
தந்ததே இலண்டன் தமிழ்
வானொலி இனிய களமது

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
அதில் சிந்திய முத்துக்களில்
மிடுக்கான அடுக்குத் தொடுப்பு
உடன் துடுப்பாக மிதந்து வந்த
முந்நூறு கிழமையது

சோர்வு, அயர்வு அகற்றி சேர்ந்த
உண்மை பயிரிட்டு உயர்வெனும்
நீரிட்டு கவிஞர் உள்ளமதை உயிர்
ஊட்டி வளர்த்த பெரும் பாவையரும்

திறனாய்வுக் கவிஞர்களும் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு இணைந்து ஒளி
பரப்பிட பாமாலையில் பூமாலை
இட்டு வாழ்த்தி வரவேற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading