ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாமாலையில் பூமாலை

ராணி சம்பந்தர்

காலம் செய்த கோலம்
ஆலம் விழுதே தமிழன்
புலம் பெயர்ந்த பொழுது

வந்தோர் வரவேற்ற தளம்
தந்ததே இலண்டன் தமிழ்
வானொலி இனிய களமது

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
அதில் சிந்திய முத்துக்களில்
மிடுக்கான அடுக்குத் தொடுப்பு
உடன் துடுப்பாக மிதந்து வந்த
முந்நூறு கிழமையது

சோர்வு, அயர்வு அகற்றி சேர்ந்த
உண்மை பயிரிட்டு உயர்வெனும்
நீரிட்டு கவிஞர் உள்ளமதை உயிர்
ஊட்டி வளர்த்த பெரும் பாவையரும்

திறனாய்வுக் கவிஞர்களும் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு இணைந்து ஒளி
பரப்பிட பாமாலையில் பூமாலை
இட்டு வாழ்த்தி வரவேற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading