நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பாமாலையில் பூமாலை

ராணி சம்பந்தர்

காலம் செய்த கோலம்
ஆலம் விழுதே தமிழன்
புலம் பெயர்ந்த பொழுது

வந்தோர் வரவேற்ற தளம்
தந்ததே இலண்டன் தமிழ்
வானொலி இனிய களமது

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
அதில் சிந்திய முத்துக்களில்
மிடுக்கான அடுக்குத் தொடுப்பு
உடன் துடுப்பாக மிதந்து வந்த
முந்நூறு கிழமையது

சோர்வு, அயர்வு அகற்றி சேர்ந்த
உண்மை பயிரிட்டு உயர்வெனும்
நீரிட்டு கவிஞர் உள்ளமதை உயிர்
ஊட்டி வளர்த்த பெரும் பாவையரும்

திறனாய்வுக் கவிஞர்களும் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு இணைந்து ஒளி
பரப்பிட பாமாலையில் பூமாலை
இட்டு வாழ்த்தி வரவேற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan