பாமாலையில் பூமாலை

ராணி சம்பந்தர்

காலம் செய்த கோலம்
ஆலம் விழுதே தமிழன்
புலம் பெயர்ந்த பொழுது

வந்தோர் வரவேற்ற தளம்
தந்ததே இலண்டன் தமிழ்
வானொலி இனிய களமது

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
அதில் சிந்திய முத்துக்களில்
மிடுக்கான அடுக்குத் தொடுப்பு
உடன் துடுப்பாக மிதந்து வந்த
முந்நூறு கிழமையது

சோர்வு, அயர்வு அகற்றி சேர்ந்த
உண்மை பயிரிட்டு உயர்வெனும்
நீரிட்டு கவிஞர் உள்ளமதை உயிர்
ஊட்டி வளர்த்த பெரும் பாவையரும்

திறனாய்வுக் கவிஞர்களும் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு இணைந்து ஒளி
பரப்பிட பாமாலையில் பூமாலை
இட்டு வாழ்த்தி வரவேற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading